ஜம்மு:
ம்முவில் ஏழுமலையான் கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

ஜம்மு அருகே மஜீன் கிராமத்தில் 62.06 ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் மற்றும் அதனுடன் தொடர்புடைய வேத பாட சாலை, அர்ச்சகர்கள் குடியிருப்பு, பக்தர்கள் தங்குவதற்கான வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் கட்டப்பட உள்ளன.

கோயிலின் நிர்வாகம் ஆந்திராவின் திருமலை-திருப்பதியில் உள்ள ஏழுமையான் கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இருக்கும்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இன்று ஜம்முவில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜி.கிஷென் ரெட்டி மற்றும் ஜிதேந்திர சிங், மற்றும் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை வாரியத் தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பிற வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.பல உள்ளூர் அரசியல் தலைவர்கள், சிவில் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளின் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.