சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாறுகிறது காவேரி மருத்துவமனை…

போர்டிஸ் மருத்துவமனைக்கு சொந்தமான சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையை காவேரி மருத்துவமனை நிர்வாகம் ரூ 152 கோடி ரொக்கமாக கொடுத்து வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயா, சூர்யா, பரணி, சிம்ஸ் என்று ஏராளமான முன்னணி மருத்துவமனைகள் அனிவகுத்துள்ள வடபழனியில் ஏவிஎம் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து கட்டப்பட்டு வந்த போர்டிஸ் மருத்துவமனை பல்வேறு தடைகளைத் தாண்டி 2020 அக்டோபர் முதல் செயல்படத் துவங்கியது.

110 படுக்கைகளுடன் கூடிய இந்த மருத்துவமனை முழுவீச்சில் இயங்க இடைஞ்சல்கள் இருந்த நிலையில் தற்போது இந்த மருத்துவமனையை காவேரி மருத்துவமனை நிர்வாகம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கலைஞர் கருணாநிதிக்கு சிகிச்சை அளித்ததன் மூலம் சென்னை மற்றும் தமிழகம் எங்கும் பிரபலமான காவேரி மருத்துவமனை பிரபலங்களைத் தாண்டி கோலிவுட் பகுதியில் உள்ள சாமானியர்களுக்காக மருத்துவமனையை விரிவுபடுத்த இருப்பது அப்பகுதி மக்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.