டேராடூன்: உத்தரகண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரீஸ் ராவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

இந் நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹரீஸ் ராவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள ஹரீஸ் ராவத் கேட்டுக் கொண்டுள்ளார். தொற்று உறுதியான ஹரீஸ் ராவத் உள்ளிட்ட 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.