சேலம்:
ட்டியலின இளைஞரை அவதூறு வார்த்தைகளால் திட்டிய திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோயில் உள்ளது. அங்கு பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி கோயிலுக்குள் நுழைந்த இளைஞரை ஊர் மத்தியில் நிற்க வைத்து ஆபாச வார்த்தைகளால் திட்டிய சேலம் திமுக ஒன்றிய செயலாளர் டி.மாணிக்கம், அந்த இளைஞரை தாக்க முயன்றார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சேலம் திருமலைகிரி மாரியம்மன் கோயிலில் நுழைந்த பட்டியலின இளைஞரை திட்டிய மாணிக்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் கொடுத்த புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.