சென்னை: மறைந்த திமுக பொதுச்செயலாளரும், பேராசிரியருமான அன்பழகன் 4வது நினைவுநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்த முதலமைச்சர் ஸ்டாலின்,  குலையா உறுதி, அசையாக் கொள்கை கொண்டவர் பேராசிரியர் அன்பழகன்  புகழாரம் சூட்டி உள்ளார்.

மறைந்த கல்வியமைச்சர் பேராசிரியர் அன்பழகனின் 4வது பிறந்தநாள் இன்று திமுகவினரால் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  குலையா உறுதி, அசையாக் கொள்கை, தாழா மானம், மங்கா உணர்வு, மாறா நட்பு, மறையாப் புகழ் என இனி வரும் இயக்கத்து இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த இனமானப் பேராசிரியர் நினைவுநாள்

கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. காலம் முதல் பொதுக்குழுவில் என்னைக் கழகத் தலைவராக அறிவித்தது வரை என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவர் நிறைந்திருக்கிறார். என் நெஞ்சில் என்றும் நீங்காதிருப்பார்! அவர்தம் கொள்கைப் பெருவாழ்வு நம்மை வழிநடத்தும் என்றுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.