டில்லி,

ராகுல்மீது பரபரப்பு  குற்றச்சாட்டு கூறிய டில்லி  மகிளா காங்கிரண் அணி தலைவி இன்று பாரதிய ஜனதாவில் இணைகிறார்.

 

ராகுல் காந்தி மீது பகிரங்கமாக குற்றம்சாட்டிய டில்லி மகிளா காங்கிரஸ் அணி தலைவி பர்க்கா சுக்லா சிங் கட்சியில், காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

பெண்கள் இட ஒதுக்கீடு குறித்து, காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக கூறுவது,  பெண்களிடம் இருந்து வாக்குகளை பெறுவதற்காகவே என்றும்,  தற்போதைய சூழலில் கட்சிக்குள் எனக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையர்கள் இவர்கள் எப்படி   பெண்களுக்கு அதிகாரம் அளிப்பார்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதன் காரணமாக அவரை 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து காங்கிரஸ் தலைமை நீக்கியது.

இந்நிலையில், முன்னாள் மகிளா காங்கிரஸ் தலைவவி பர்காசிங், இன்று பாரதியஜனதா தலைவர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார்.

இன்று மதியம் 1 மணி அளவில் பாரதியஜனதா தலைமை அலுவலகத்தில் இணைவதாக தகவல்கள் டில்லி வட்டார தகவல்கள் உறுதிபடுத்துகின்றன.