\சென்னை

டுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யலாமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை,  திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.