சென்னை

இன்னும் 2 நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான பனி மூட்டம் இருக்கலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கடும் குளிர் நிலவுகிறது.  டில்லி உள்ளிட்ட பல இடங்களில்  கடும் பனி மூட்டம் உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் சில மலைப் பிரதேசங்களில் தொடர்ந்து பனி மூட்டம் உள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

”29-01-2024 மற்றும் 30-01-2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

31-01-2024 முதல் 02-02-2024 வரை: தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

03-02-2024 மற்றும் 03-03-2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

29-01-2024 மற்றும் 30-01-2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது .

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.