டில்லி:

பொங்கல் பண்டிகையையெட்டி மிகக்குறைந்த விலையில் னுரூ.99க்கு விமான டிக்கெட் வழங்கி அசத்தி உள்ள ஏர் ஆசியா விமான நிறுவனம்.

ரூ.99 கட்டணமாக  பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, கோல்கட்டா, புதுடில்லி, புனே, ராஞ்சி ஆகிய 7 நகரங்களுக்கு இந்த சலுகை விலை  விமான சேவை வழங்கி  உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜனவரி 15 முதல் (பொங்கல்)  ஜூலை 31 வரை ஏர்ஏசியா விமானத்தில் பயணிகள் இந்த குறைந்த விலையில் விமான பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளது.

இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கி உள்ளதாகவும் வரும் 21ந்தேதி வரை முன்பதிவு நடைபெறும் என்றும் அறிவித்து உள்ளது.

மேலும், ஏர்ஏசியா மொபைல் ஆப் மற்றும் ஏர்ஏசியா இணையதளம் மூலம் முன்பதிவு செய்வோருக்கு கட்டண சலுகையும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ரூ.1499 கட்டணத்தில் ஆக்லாந்து, பாலி, பாங்காக், கோலாலம்பூர், மெல்பேர்ன், சிங்கப்பூர், சிட்னி உள்ளிட்ட ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 10 நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என்றும் அறிவித்து உள்ளது.