சென்னை: செந்தூர் விரைவு ரயிலில் ஜூன் 15 முதல் கூடுதலாக 5 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்மூலம் தென்மாவட்ட மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேறி உள்ளது.

சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் விரைவு ரயில் இயக்கப்பட்டுவருகிறது. இந்த ரயிலுக்கு பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பு உள்ளது. சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, செந்தூர் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தினசரி மாலை சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை திருச்செந்தூரை சென்றடைகிறது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த ரயில் மூலம் முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் இந்த ரயிலில் எப்போதும், கூட்ட நெரிசல் ஏற்படுகிறது
இதனால்,கூடுதலாக மேலும் பல பெட்டிகள் இயக்க வேண்டும் என அ கோரிக்களை எழுந்தன. அந்த கோரிக்கைகளை ரயில்வே வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படடி, வழக்கமாக இயக்கப்பட்டு வரும 18 பெட்டிகளுடன் கூடுதலாக 5 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படவுள்ளது. இதன் மூலம், செந்தூர் எக்ஸ்பிரஸ் இனிமேல் 23 பெட்டிகளும் இயக்கப்படுகிறது. இந்த கூடுதல் பெட்டிகள் இணைப்பு ஜூன் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது என ரயில்வே அறிவித்துள்ளது.
‘இதன்மூலம் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், முதல் வகுப்பு ஏசி பெட்டி, இரண்டடுக்கு ஏசி பெட்டி தலா ஒன்று, மூன்றடுக்கு ஏசி பெட்டி 3, இரண்டாம் வகுப்பு 3 அடுக்கு தூங்கும் வசதி பெட்டி 12, பொது பெட்டி 4, லக்கேஜ் வகுப்புடன் பொது பெட்டி 2 என மொத்தம் 23 பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
[youtube-feed feed=1]