டில்லி

மலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் முதல் முறையாகப் பிரியங்கா காந்தியின் பெயர் இடம் பெற்றுள்ளது.

அரியானாவில் டில்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவர் மூலம் நிலத்தை வாங்கியபின், விற்பனை செய்தது தொடர்பான வழக்கில். அரியானாவில் 2005-06ல் ராபர்ட் வதேரா, ரியல் எஸ்டேட் ஏஜெண்டிடம் இருந்து 3 மனைகளை வாங்கியது தொடர்பாகவும், பிரியங்கா காந்தியின் நில ஒப்பந்தம் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறையின் வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலதிபர் சிசு தம்பியுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் முந்தைய குற்றப்பத்திரிகையில் அவரது கணவர் ராபர்ட் வத்ராவின் பெயரைக் குறிப்பிட்டிருந்தது.

பிறகுத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலதிபர் சிசி தம்பி, இங்கிலாந்து வாழ் இந்தியர் சுமித் சதா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தற்போது இந்த குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தியின் பெயரைச் சேர்த்துள்ளது.  ஆயினும் எந்த இடத்திலும் பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் வதேரா ஆகியோரை குற்றவாளி எனக் குறிப்பிடவில்லை.