சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சுகாதார பேரவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  தாய், சேய் நல தொகுப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  அத்துடன், சிசுவின் குறைபாடுகளை கருவிலேயே கண்டறியும் சிறப்பு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழக சுகாதார சீரமைப்பு திட்டம் சார்பில் மாநில சுகாதார பேரவை அமைக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவிலேயே முதல்முறையாக  சுகா தாரத்தை மேம்படுத்தும் வகையில் சுகாதார பேரவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில்,  மாவட்ட வாரியாக சிறந்த மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.