ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிராக நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில், தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இலங்கை அணி, வலுவான முன்னிலையை நோக்கி நகர்ந்து வருகிறது.

முதல் இன்னிங்ஸில் 102 ரன்கள் பின்தங்கிய இலங்கை அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை நேற்று துவக்கியது. தற்போது 4ம் நாள் ஆட்டம் நடைபெற்றுவரும் நிலையில், இரண்டாவது செஷனில் 5 விக்கெட்டுகளை இழந்து 381 ரன்களைக் குவித்துள்ளது.

இதன்மூலம், தற்போதைய நிலையில் 279 ரன்கள், விண்டீஸ் அணியைவிட முன்னிலைப் பெற்றுள்ளது இலங்கை அணி. அந்த அணியில் இதுவரை 5 பேர் அரைசதம் அடித்துள்ளனர்.

அதில் பெர்ணான்டோ 91 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். நிஸான்கா 83 ரன்களை அடித்து களத்தில் உள்ளார். டிக்வெல்லா 50 ரன்களை தொட்டுள்ளார்.

நிலைமை இப்படியே தொடர்ந்தால், இலங்கை அணி 400 ரன்கள் வரை முன்னிலைப் ப‍ெற்று டிக்ளேர் செய்யும் அல்லது ஆட்டத்தை அதுவரை எடுத்துச்செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.