சென்னை,

திட்டமிட்டப்படி மே 12ல் +2 தேர்வு முடிவுகள் வெளியாகும்; மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் முடிவுகள் அனுப்பப்படும் என்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது,

வரும்  மே 12ந்தேதி  பிளஸ் டூ தேர்வு முடிவுகள்  திட்டமிட்டப்படி வெளியிடப்படும் என்றும், அதேபோல் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ந்தேதி வெளியிடப்படும் என்றும் கூறினார்.

இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்ககனவே கொடுத்துள்ள மொபைல் எண்ணிற்கு  நேரடியாக அனுப்பப்படும் என்று கூறினார். மாணவர்கள்   மாணவர்கள் எந்த மொபைல் எண்களை கொடுத்திருக்கிறார்களோ அந்த எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்றும், அது அவர்களது மொபைல் எண்ணாலும் சரி, அவர்களது பெற்றோர்களின் எண்ணாக இருந்தாலும் அவர்கள் கொடுத்துள்ள எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும் என்றார்.

இதன் காரணமாக தேர்வு வெளியான 10 நிமிடங்களுக்குள் அனைத்து மாணவர்களும் தங்களது மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறினார்.

இந்தியாவிலேயே இதுபோன்ற சேவையை தமிழகம்தான்  முதல்முறையாக செயல்படுத்த இருக்கிறது என்றும் கூறினார்.