சென்னை

.தியாகராய நகர் ரங்கனாதன் தெருவில் உள்ள ஒரு துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது,

எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் சென்னை தியாகராய நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள ஷோபா ஆடையகம் என்ற துணிக் கடை இரண்டு அடுக்கு மாடிகள் கொண்ட கடையாகும்.

இங்கு உயர் ரக துணிகளுக்கான முதல் தளத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக கடையில் வேலை பார்த்த ஊழியர்கள் கடையிலிருந்து வெளியேறி உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்

அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தும் பல லட்சக்கணக்கான ஆடைகள் எரிந்து நாசம் ஆனது. இது குறித்து மேற்கு மாம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

போலீசின் முதற்கட்ட விசாரணையில் குளிர்சாதனப் பெட்டியில் மின்கசிவு காரணத்தால் தீப்பிடித்ததாக தெரியவந்துள்ளது.  தீ விபத்தில் ஊழியர்களுக்கு தீக்காயம் ஏதும் ஏற்படவில்லை. உயிரிழப்பும் ஏதுமில்லை