ராய்ப்பூர்

பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி மீது சத்தீஸ்க்ர் மாநில காவல்துறை ராகுலை தவறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை நடத்தி போதைப் பொருள் பழக்கமில்லாதவர் என உறுதி செய்யப்பட வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்தது. இதற்கு மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் இந்த சோதனைகளை சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் கூட செய்ய வேண்டும் என கூறினார்.

பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி, “அமைச்சர் பாதல் கூறியதை நான் வரவேற்கிறேன். பஞ்சாபிகளில் 70% பேர் போதை பழக்கமுள்ளவர்கள் என்பதை அவர் சொன்ன போதிலும் ராகுல் காந்தி பற்றி கூறவில்லை. ராகுல் காந்தி கொகைன் பயன்படுத்தி வருகிறார். அவரை மருத்துவ சோதனை செய்தால் அதை கண்டறியலாம். போதை மருந்து சோதனையில் அவர் நிச்சயம் தோல்வி அடைவார்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு காங்கிரசார் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. சத்தீச்கர் மாநிலத்தில் ஜாஷ்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பவன் அகர்வால் பதல்கான் காவல்நிலையத்தில் சுப்ரமணியன் சுவாமி மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட பஞ்சாப் மாநில காவல்துறை  குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டுள்ளது.   சுப்ரமணியன் சுவாமி மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.