டில்லி

தாயை விவாகரத்து செய்தாலும் தந்தையே குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு விவாகரத்து வழக்கில் மனைவியை விவாகரத்து செய்த கணவர் தன்னுடைய மனைவி மற்றும் இரு குழந்தைகள் பராமரிப்புக்காக ரூ.4 கோடி வழங்க குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.  கணவர் அந்த பணத்தைக் கொடுக்காததால் மனைவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்  இந்த வழக்கை நீதிபதிகள் சந்திரசூட், எம் ஆர் ஷா ஆகியோரின் அமர்வு விசாரித்தது.

விசாரணையின் போது கணவர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், “குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த அத்தனை உத்தரவுகளையும் எனது கட்சிக்காரர் நிறைவேற்றி உள்ளார்.  ஆனால் கொரோனா பரவல் காரணமாக வியாபாரம் மிகவும் மந்தமடைந்துள்ளது.  ஆகவே அவரால் ரூ.4 கோடி தர முடியவில்லை” எனத் தெரிவித்தார்

நீதிமன்ற அமர்வு, “கணவனால் மனைவியை விவாகரத்து செய்ய முடியுமே தவிரக் குழந்தைகளை விவாகரத்து செய்ய முடியாது.  அவர்களைப் பெற்றவர் என்னும் முறையில் தந்தைக்குக் குழந்தைகளை பாரமாக்கும் கடமை உண்டு.  இதற்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.  நிதி நெருக்கடியால் ரூ.4 கோடி அளிக்க முடியவில்லை என்பதி ஏற்க முடியாது.

ஆனால் தவணை முறையில் அந்த ரூபாயை வழங்கலாம்.  வரும் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் ரூ.1 கோடி மற்றும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் மீதமுள்ள ரூ.3 கோடியை மனைவிக்கு வழங்க வேண்டும் எனக் கணவருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.