மிர்தசரஸ்

ஞ்சாப் மாநிலத்தில் ஒரு நாள் முழுவதும் வராத 20 வயதுப் பெண்ணை அவர் தந்தை வெட்டிக் கொலை செய்து மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்றுள்ளார்,

பஞ்சாபில் அமிர்தசரஸ் அருகில் உள்ள முச்சல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாவ். இவர் ஒரு  கூலித்தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணமாகி 20 வயதில் மகள் ஒருவர் இருந்தார். அவரது மகள் கடந்த புதன்கிழமை யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

பிறகு அவர் வியாழக்கிழமை வீட்டுக்குத் திரும்பி வந்தார். பாவ் தனது மகளிடம், யாரிடமும் சொல்லாமல் எங்கு சென்றாய்? ஒரு நாள் முழுவதும் வீட்டுக்கு வராதது ஏன்? எனக் கேட்டுச் சண்டையிட்டார்.  மகள் சரியாகப் பதில் சொல்லாததால் சண்டை வலுத்துள்ளது.

கோபத்தின் உச்சிக்குச் சென்ற பாவ் வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து மகளை வெட்டிக் கொலை செய்தார். பிறகு அவர் மகளின் உடலைத் தனது மோட்டார் சைக்கிளில் கட்டி கிராமம் முழுவதும் தரதரவென இழுத்துச் சென்று தனது மகளின் உடலை ரெயில் தண்டவாளத்தில் வீசிவிட்டுச் சென்றார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பாவை கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.