வுகாத்தி.

சாம் மாநிலத்தில் உடல் பருமன்  மற்றும் குடிப்பழக்கம் உள்ள 680 காவல்துறையினருக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட உள்ளது.

அசாம் மாநில டிஜிபி ஜி.பி.சிங் செய்தியாளர்களிடம்,‘‘அசாம் மாநிலத்தில் 70 ஆயிரம் காவல்துறையினர் உள்ளனர்.  இவர்களில், குடிப்பழக்கம், உடல் பருமன் மற்றும் உடல் தகுதியற்ற காவல்துறையினர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.  இந்த பணிக்காக மாவட்ட மற்றும் பட்டாலியன் அளவில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கமிட்டி டிஎஸ்பி தலைமையிலான அமைக்கப்பட்டுள்ளது.   இக்கமிட்டி இதற்கான பட்டியலை தயாரித்து எஸ்பி அல்லது பட்டாலியன் கமாண்டருக்கு அறிக்கை அளிக்க உள்ளது . அந்த அறிக்கை காவல்துறை தலைமையகத்துக்கு அனுப்பப்பட உள்ளது.

அதற்கு பிறகு தன்னார்வ விருப்ப ஓய்வுக்கான நபர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது. இவர்களில் உடல் தகுதி இல்லாதவர்கள் தகுதியைப் பெறுவதற்கு 4 மாதங்கள் வரை அவகாசம் அளிக்கப்படும். இ[போது இந்த பட்டியலில் 680 காவல்துறையினர் உள்ளனர்’’ எனத் தெரிவித்துள்ளார்.