திருப்பூர்:
க்காளி விவசாயி ஒருவர் ஒரே நாளில் ரூ.4 லட்சம் சம்பாதித்து உள்ளார்.

தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த விவசாயியான வெங்கடேஷ். தக்காளி விவசாயியான இவர், 3900 கிலோ தக்காளிகளை சுமார் 260 பெட்டிகளில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார்.

ஒரு பெட்டிக்கான விலை 1550 முதல் விற்பனையானது. இதன் மூலம் ஒரே நாளில் 4 லட்சத்தை வருமானமாக ஈட்டினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளாக தக்காளி விவசாயம் செய்து வருகிறேன், 9 ஏக்கர் அளவுக்கு தக்காளி பயிரிட்டுள்ளேன்.

தக்காளியின் விலை அதிகரிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன், இன்னமும் தக்காளி பறிக்க வேண்டியுள்ளது, விவசாயம் எப்போதும் விவசாயிகளை கைவிடாது என தெரிவித்துள்ளார்.