டில்லி

பிரபல யூ டியூபர் அகச்தய் சவுகான் பைக்கில் 300 கிமீ வேகத்தில் சென்று விபத்தில் மரணம் அடைந்தார்

சுமார் 25 வயதான அகஸ்தய் சவுகான் உத்தராகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் ஆவார்.  இவர், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களைப் பற்றி ரிவியூவ் செய்வதோடு, மோட்டார் சைக்கிள்களில் அதிவேகத்தில் சென்று சாகசம் செய்யும் காணொளிகளை ‘புரோ ரைடர் 1000’ என்ற யூடியூப் சானலில் பதிவிட்டுவந்தார்.  இவருடைய யூடியூப் சானல் 12 லட்சம் பார்வையாளர்களைக் கொண்டிருந்தது.

இவர் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஆயிரம் சிசி திறன்கொண்ட கவாசாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர் என்ற பைக்கின் முழு வேகத்தையும் சோதித்துப் பார்க்க முடிவு செய்தார். இதையொட்டி கடந்த புதன்கிழமை, யமுனா விரைவுச் சாலையில் ஆக்ராவில் இருந்து டெல்லியை நோக்கிப் பயணித்தார் அகஸ்தய்.

இதை வீடியோவாக பதிவுசெய்து தனது சேனலில் பதிவிடுவதற்கான பணிகளை மேற்கொண்டபடி பைக்கை அகஸ்தஸ் இயக்கினார்.  தாம் செல்லும் வழியில் பைக்கில் பயணித்த மற்ற வாகன ஓட்டிகளிடம் பேசியவாறும், அவர்களை தன்னைவிட அதிக வேகத்தில் செல்லுமாறும் கூறியபடி சென்றார்.  பிறகு அவர்களை விட மின்னல் வேகத்தில் பறப்பதுமாக ரன்னிங் கமென்ட்ரி கூறியவாறே பைக்கை ஒட்டிச்சென்றார்.

இந்த பைக் வெறும் 3 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தையும், அடுத்த 10 வினாடிக்குள் 200 கிலோ மீட்டர் வேகத்தையும் எட்டும் திறன் கொண்டதாகும்.  இதில் 47-வது மைல் பாயின்ட் என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்த அகஸ்தய், தற்போது 300 கிலோ மீட்டர் வேகத்தை எட்ட உள்ளதாக தெரிவித்தார்.  ஆனால்; அப்போது, பைக்கை கட்டுப்படுத்த இயலாமல் தடுமாறி சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதினார்.

அவர் மோதிய வேகத்தில் பைக் தூக்கிவீசப்பட்டது. இதனால் அவர் அணிந்திருந்த தலைக்கவசம் பல துண்டுகளாக உடைந்து தலையில் பலத்த காயம் அடைந்த அகஸ்தய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது மரணம் ரசிகர்களுக்கு அதிர்சசியை அளித்துள்ளது.