டில்லி: இனிமேல் அனைத்து பள்ளிகளிலும் 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை இருக்கும் என மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சம் அறிவித்துள்ளது.
தற்போது 8 ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை நடைமுறையில் இருக்கிறது.  இந்த முறையை மாற்றி 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சியாக்குவதற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தேர்ச்சி குறித்த பயமில்லாததால், மாணவர்கள் மத்தியில் ஒழுக்கமின்மை அதிகரித்து வருவதாகவும் அதனால் மத்திய மனித வள அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதகாவும் கூறப்படுகிறது.
கடந்த 2009ம் ஆண்டின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் 16வது பிரிவில் திருத்தம் செய்யவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய எந்த மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.