திருப்பதி:
விரைவு தரிசன டிக்கெட் நாளை வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையானுக்கு அடுத்த வாரம் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்க உள்ளது. இதையடுத்து, 7 – 10ம் தேதி வரையிலான 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவை தேவஸ்தானம் நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில் இந்த நான்கு நாட்களுக்கான விரைவு தரிசனத்திற்கான முன்பதிவு, நாளை காலை 9:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.