துபாய்:
ரும் 23-ஆம் தேதி முதல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை இயக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்து உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தங்கள் நாட்டிற்கு வருபவர்கள் 6 விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அமீரக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி ஏதாவது ஒரு தடுப்பூசியின் 2 டோஸ் செலுத்திக் கொண்டதற்கான சான்று கொண்டு வர வேண்டும் என தெரிவித்து உள்ளது.

மேலும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். சான்று வேண்டும் என்றும், விமானம் ஏறுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பும் துபாயில் தரையிறங்கியதும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது., பரிசோதனை முடிவுகள் வரும் வரை பயணிகள் தனிமைப்படுத்துதலை முறையாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.