சென்னை:
ரசு பணியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வரும்  31ஆம் தேதி வரை பணி விலக்கு அளிப்பதாக தமிழக  தலைமைச் செயலாளர் சண்முகம்  அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மாற்று திறனாளிகள் நல இயக்குனர்  கோரிக்கையை ஏற்று, மாநிலம் முழுவதும் தனியார், மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து, உள்பட அரசு பணிகளில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு கருதி, மாற்றுத் திறனாளிகளுக்கு  வரும் 31ந்தேதி வரை அலுவலக பணிகள் மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிப்பதாக அரசு ஆணையிட்டுள்ளது.