சென்னை:
கொரோனா சோதனை – தனிமைப்படுத்துதல் தொடர்பாக தமிழகஅரசு புதிய நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
அதன்படி 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு  மற்றும் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்தால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
அதன்படி  ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை நடத்தப்படும் .
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
அடுத்த மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவருக்குமே சோதனை செய்யப்படும்.
சோதனை உறுதி செய்யப்பட்டால் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வந்து, உடனடியாக மருத்துவமனை செல்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
கர்ப்பிணி பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு வருபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது .
75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு  அளிக்கப்பட்டுள்ளது. 
இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.