குர்கான்

முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவருமான சவுத்ரி அஜித் சிங் இன்று கொரோனாவால் உயிர் இழந்தார்.

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் மகனான அஜித் சிங் 1939 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி பிறந்தவர் ஆவார்.   இவர் மத்திய அமைச்சராக நான்கு முறை பணி புரிந்துள்ளார்.

இவர் வாஜ்பாய், நரசிம்மராவ், விபி சிங் மற்றும் மன்மோகன் சிங் ஆகிய பிரதமர்களின் கீழ் பணி புரிந்துள்ளார்.   இவர் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆவார்.

அஜித் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குர்கானில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார்.  அங்கு அவருடைய உடல் நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆயினும், சிகிச்சை பலனின்றி இன்று அஜித் சிங் மரணம் அடைந்தார்.  இவருடைய மனைவி பெயர் காயத்ரி தேவி ஆகும்.  இவருக்கு ஜெயந்த் சவுத்ரி என்னும் மகனும் இரு மகள்களும் உள்ளனர்.