மும்பை

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி சாலை விபத்தை ஏற்படுத்தியதாக காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் வினோத் காம்ப்ளி, மும்பையில் உள்ள பாந்த்ரா என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று மதியம் இவர் தனது குடியிருப்பு வளாகத்துக்கு காரில் வந்துள்ளார்.  அவ்வாறு இவர் காரில் வந்தபோது அங்கு இருந்த இரும்பு கதவு மீது காரை மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளார்.

அங்குள்ள குடியிருப்பு காவலாளி இது குறித்துக் கேட்டுள்ளார்.   இதையொட்டி குடியிருப்பு காவலாளியுடன் தகராறில் ஈடுபட்டார்.  குடியிருப்பு காவலாளிக்கு ஆதரவாக பேசிய சில குடியிருப்பு வாசிகளுடனும் அவர் சண்டையிட்டுள்ளார்.   எனவே அங்கிருந்தோர் இது தொடர்பாகப் போலீசில் புகார் அளிதுள்ளனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர். சம்பவ இடத்துக்கு வந்து காரை அதிவேகமாக ஓட்டுதல் பிறர் உயிருக்கு ஆபத்து விளைவித்தல் அலட்சியத்தால் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் காம்ப்ளி மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். பிறகு வினோத் காம்ப்ளி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.