சென்னை

கொரோனா அறிகுறி காரணமாக முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம்  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் அரசின் பல ஊழல்களை வெளிக்கொணர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளில் சகாயமும் ஒருவர் ஆவார்.   இவருடைய பல தீரச் செயல்களால் இவர் பிரபலமானவர் ஆவார்.   இவர் தற்போது விருப்ப ஓய்வு பெற்று அரசியலில் இறங்கி உள்ளார்.

இவருடைய ஆதரவாளர்கள் இன்று நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டனர்.   இவர்களுக்கு ஆதரவாகத் தொடர் பிரசாரத்தில் சகாயம் ஈடுபட்டு வந்தார்.

இன்று சகாயத்துக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.  இதையொட்டி அவர் முன்னெச்சரிக்கையாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.