புதுடெல்லி:
ப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் சையது அஹ்மத் ஷா சதாத் தற்போது ஜெர்மனியில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்யும் பணியைச் செய்து வருகிறார்.
ஆப்கானிஸ்தான் முன்னாள் தகவல் மற்றும் தொடர்பு அமைச்சராக இருந்தவர் சையது அஹ்மத் ஷா சதாத்.  கடந்த 2018-ல் நாடு கடத்தப்பட்ட அதிபர் அஷ்ரப் கானியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த இவர்,  இரண்டு ஆண்டுகள் அமைச்சராக இருந்தார். பின்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கடந்த டிசம்பர் மாதம் நாட்டை விட்டு ஜெர்மனி சென்றார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் சையது அஹ்மத் ஷா சதாத்,  லிவ்ராண்டோவின் உணவு விநியோக நிறுவனத்தில், டெலிவரி எக்ஸிகியூட்டிவ் ஆக பணியாற்றத் தொடங்கியுள்ளார்.
இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு மற்றும் மின்னணு பொறியியலில் இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும், 23 வருடங்களுக்கும் மேலாக, சதாத் சவுதி அரேபியா உட்பட 13 நாடுகளில் குறைந்தது 20 நிறுவனங்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.