புதுடெல்லி: 
த்தரபிரதேச  தேர்தலில் வெற்றிபெற அனைவரின் பங்களிப்பும் அவசியம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு மாநிலச் சட்டசபைத் தேர்தலுக்கான வியூகத்தை வகுக்க, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அலுவலக அதிகாரிகளுடன் லக்னோவில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆலோசனை நடத்தினார்.  இந்த முறை மூத்த உறுப்பினர்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சி ஏற்கனவே மாநிலத்தின் பல பகுதிகளில் பயிற்சி முகாம்களை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.