டெல்லி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால்,  இரட்டை இலை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையதுதகுக  ஒத்தரவிடக்கோரி இபிஎஸ் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பாக வரும் 30ந்தேதி நீதிமன்றத்தில் முறையிடுமாறு அறிவித்துள்ளது.

திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து, காலியான ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி பிப்ரவரி மாதம் 27-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முன்னதான 31ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. இந்த தேர்தல் திமுக கூட்டணி சார்பில் இவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தேமுதிக சார்பிலும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது.  நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஈரோட்டில் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார். ஆனால், எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு தங்களது வேட்பாளர்களை களமிறக்குவதாக அறிவித்து உள்ளனர்.

அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டு உள்ளது.  அதுதொடர்பாக எடப்பாடி தரப்பினல் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில், இன்றும் ஆலோசனை நடத்திவ ருகின்றனர்.

இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஈபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம் என்றும், இடைக்காலப்பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது எனவும் அதிமுக இடைக்காலபொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட முடிவை தேர்தல் ஆணையம் ஏற்கக்கொள்ள உத்தரவிடக் கோரியும் முறையிடப்பட்டுள்ளது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி தினேஸ்வரி அமர்வில் பழனிசாமி தரப்பில் முறையிடப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 30-ம் தேதி முறையிட வேண்டும் என பழனிசாமி தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒருவேளை முன்னதாகவே அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு வழங்க முடியுமா? என்பதை பார்க்கலாம் என்றும், தீர்ப்பு தாமதமாகும் பட்சத்தில் இடைக்கால நிவாரணம் வழங்குவது தொடர்பாக முடிவு செய்யலாம்.

வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளுக்குள்ளாக உத்தரவுகள் வரவில்லை என்றால் முறையீடு பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.