சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக தனித்தே களம் காண்கிறது என இபிஎஸ் ஆதரவாளர்  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் தேர்தலாக இது அமையும். திண்டுக்கல் தொகுதியில் எம்ஜிஆர் வெற்றி திருப்பு முனையை உருவாகியது போன்று ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாக இருக்கும். அந்த அளவுக்கு தான் மக்களின் மனநிலை உள்ளது. இந்தத் தேர்தல் தமிழகத்திற்கு ஒரு மாற்றத்தை உருவாக்கி காட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து பாஜக கருத்து தெரிவிக்காத நிலையில் தனித்து களம் காண்பதாக அதிமுக அறிவித்துள்ளது என்றவர்,  நாங்கள்  தனித்து களத்தில் நிற்கிறோம் என்றவர், எங்களது  கூட்டணி தொடர்பாக 3 நாட்களில் பொதுச் செயலாளர் அறிவிப்பார் என்றார்.

அதிமுகவின் 98.5 சதவீத நிர்வாகிகள் ஒரே அணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒருங்கிணைந்ததுள்ளோம்.  அதனால் இந்த இடைத்தேர்தல் அதிமுகவுக்கு  வெற்றி சரித்திரம் படைக்கும் வெற்றியாக அமையும்” என்று அவர் கூறினார்.