சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியாக இருப்பதாக தமிழ்நாடு சட்டசபை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றிபெற்று, எம்எல்ஏவாக இருந்து வந்தார். இவர் கடந்த 4ந்தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக, தமிழக சட்டசபை செயலகம் அறிவித்து உள்ளது. இதுதொடர்பான  தகவலை தமிழக சட்டசபை செயலர், த‘ தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைத்தார். அவர் அதை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.