சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் என கோரிக்கையுடன்  4வது நாளாக போராட்டம் நடத்திவரும் ஆசிரியர்கள் இன்ற சென்னை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அரசு அலுவலகங் ளான எழிலகத்தை முற்றுகையிட்டு  போராட்டம்  நடத்தினர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சம வேலைக்கு சம ஊதி​யம் கோரி, சென்​னை​யில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்​டம் நடத்​தி வருகின்றனர்.  நேற்று  போராடும்  இடைநிலை ஆசிரியர்கள், மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்தை நேற்று முற்​றுகை​யிட்ட போது கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இன்று எழிலகத்தை முற்றுகிட்டனர்.

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் 2009 மே 31-ம் தேதி நியமிக்​கப்​பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்​களுக்கு ஓர் ஊதி​ய​மும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்​யப்​பட்ட ஆசிரியர்​களுக்கு மற்​றொரு ஊதி​ய​மும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. ஒரு​நாள் வித்​தி​யாசத்​தில் அடிப்​படை ஊதி​யத்​தில் ரூ.3,170 குறைந்​துள்​ளது. இதனால், சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த முரண்​பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்​கக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் நீண்​ட​கால​மாக வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்​கையை இது​வரை ஏற்​க​வில்​லை. இந்த ​நிலை​யில், சம வேலைக்கு சம ஊதி​யம் கோரிக்கையை முன்​வைத்​து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில், கடந்த டிச. 26-ம் தேதி முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. நேற்று, 3-வது நாளாக சென்னை மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்டு நேற்று போராட்​டம் நடத்​தினர். நுழைவு வாயி​லில் அமர்ந்து ஏராள​மான ஆசிரியர்கள் தங்​கள் கோரிக்​கைகளை வலி​யுறுத்தி கோஷங்​களை எழுப்​பினர். இதனால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்​பட்​டது.

இதையடுத்​து, போலீ​ஸார், போராட்​டத்​தில் ஈடு​பட்ட ஆசிரியர்​களை கைது செய்​தனர். அப்​போது சில ஆசிரியர்கள் மயங்கி விழுந்​தனர். அவர்​கள், அரு​கில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக சேர்க்​கப்​பட்​டனர். கைது செய்​யப்​பட்ட ஆசிரியர்கள், சென்​னை​யின் பல்​வேறு பகு​தி​களில் உள்ள 10 திருமண மண்​டபங்​களில் அடைத்து வைக்​கப்​பட்டு மாலை விடுவிக்​கப்​பட்​டனர்.

இந்த ​நிலை​யில், தங்​கள் கோரிக்​கையை வலி​யுறுத்​தி, போ​ராட்​டம் இன்​றும் (29-ம் தேதி)   சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை முன் திடீரென ஆசிர்யர்கள் குவிந்த நிலையில் எழிலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற ஆசிரியர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைடுத்து போராடும் ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

[youtube-feed feed=1]