சென்னை:  தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என நீதிமன்ற அவமதிப்பு வழங்கில்  தமிழக அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டு உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில்  செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.  இவர்கள்  சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி அரசை வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி, நிரந்தர செவிலியர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், தாங்களும் அவர்கள் செய்யும் பணியையே செய்து வருவதால், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இகுறித்து முடிவெடுக்க 2018ல் ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், இந்த  உத்தரவை அப்பாதைய அதிமுக அரசும், தற்பாதைய திமுக அரசும் நிறைவேற்ற முன்வரவில்லை.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு மீது செவிலியர்கள், நீதிமன்ற உத்தரவை  நிறைவேற்றாததை, கண்டித்து, அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை அடுத்து,  கடந்த  2018ம் ஆண்டின் உயர்நீதிமன்ற உத்தரவை மூன்று மாதங்களில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அவதூறு வழக்கை முடித்து வைத்தது.