சென்னை: ஒரே ரெய்டில் ‘புலிகேசி’யாக மாறிவர் தன்னை சொல்ல நா கூசவில்லையா என முதலமைச்சர் ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள   டெல்லி செல்லும் முதல்வரை விமர்சித்த எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் காட்டமான பதில் அளித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்வது, மத்தியஅரசிடம் வெள்ளை குடை பிடிப்பதற்காக என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்தன நிலையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையைப் பெற டெல்லி செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை பற்றி பேசவே தாம் டெல்லி செல்லவுள்ளதகாவும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ,” தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை #NITIAayog கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்!

சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?

“பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது” என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் ‘புலிகேசி’யாக மாறி ‘வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற’ பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?

இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்!

இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்!” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு செல்வது குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்திரந்தார்.   தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்! வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ?, படுத்தே விட்டாரய்யா… எல்லாம் “தம்பி” படுத்தும் பாடு! என கூறியிருந்ததுடன், 

கடந்தாண்டு ஆண்டு அந்தக் கூட்டத்திற்கு செல்லாத ஸ்டாலின் இந்த ஆண்டு செல்வது ஏன்? அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து செல்கிறாரா? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி இருந்தார்.

 

டெல்லியில் நடைபெறும் நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…