ண்டன்

ரும் 2030க்குள் புகைப்பழக்கத்தை ஒழிக்க உறுதி கொண்டுள்ளதாக இங்கிலாந்து சுகாதார் அமைச்சர் கூறி உள்ளார்.

உலகெங்கும் புகைப்பிடித்தல் பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதில் அதிக அளவில் இங்கிலாந்து நாட்டில் புகைப்பழக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

புகைப்பழக்கத்தால் ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பேர் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றதால் தனிநபருக்கு மட்டுமின்றி அரசாங்கத்துக்கும் சுகாதார செலவுகள் அதிகரித்து வருகிறது. ஆகவே இதனைக் குறைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில் ஒருபகுதியாக சிகரெட் பாக்கெட்டுகளில் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும், புகைப்பழக்கத்தைக் கைவிடும்போது ஏற்படும் நன்மைகளையும் குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஸ்டீவ் பார்க்லே இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் புகைப்பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.