சென்னை: பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி  அறிவித்துள்ளார்.

பொறியியல் கலந்தாய்வு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை தொடங்கப்படுவதாக இருந்தது. இந்த நிலையில், பொதுப்பிரிவு கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நாளை தொடங்க இருந்த பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வராததால், கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுவதாகவும், நீட் தேர்வு முடிவு வெளியாகி 2 நாட்களுக்கு பிறகு பொது கலந்தாய்வு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.