குருவாயூர்

டிகர் மோகன்லாலின் காரை குருவாயூர் கோவில் வாசல் வரை அனுமதித்த ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது கேரளாவில் கொரோனா பரவல் மிகவும் அதிகமாக உள்ளது.  தினசரி கொரோனா பரவலில் கேரள மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.   இதையொட்டி கேரள கோவில்களில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.  குருவாயூர், சபரிமலை போன்ற கோவில்களில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக குருவாயூர் கோவில் வளாகத்துக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  எந்த ஒரு பிரபலமாக இருந்தாலும் வாகனத்தில் வளாகத்துக்குள் செல்ல முடியாது.  இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் சில தினங்களுக்கு முன்பு தனது மனைவியுடன் தரிசனம் செய்ய வந்தார்.

அப்போது அவருடைய வாகனத்தைக் கோவில் பிரதான நுழைவாயில் வரை செல்ல பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அனுமதித்துள்ளனர்.  இது கடும் சர்ச்சையை உண்டாக்கியது.  எனவே கோவில் நிர்வாகம் வாகனத்தை அனுமதித்த பாதுகாப்பு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது.  இவர்கள் மீது விசாரணை நடைபெற உள்ளது.