டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை மாலை வெளியிடப்படும் என  இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இன்று புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் பதவி ஏற்ற நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

தற்போதுள்ள  நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற மே மாதம் முடிகிறது. இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   இதற்கான அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதில்,  நாளை அதாவத, மார்ச் 16ந்தேதி பிற்பகல்  3மணிக்கு மக்களவைக்கான தேர்தல் தேதிகள் மற்றும் சில மாநிலங்களில் நடைபெற சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல்கள் தொடர்பாகவும் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தும், அனைத்துசோசியல் மீடியாவில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.