டில்லி

டைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு 7 அல்லது 9 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கும் உத்தேச தேதியைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டதாகவும், ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதிக்கு ஏற்றவாறு தேர்தல் சார்ந்த திட்டங்களை வகுக்கும்படி மாநில தேர்தல் அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியதாகவும் இன்று மதியம் தகவல் வெளியானது.

டில்லியில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகின.  மேலும் சுற்றறிக்கையில் உள்ள தேதி தேர்தலுக்கான உத்தேச தேதிதானா? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

டில்லி தலைமைத் தேர்தல்  ஆணைய அலுவலகம் தனது எக்ஸ் தளத்தில்,

:சில ஊடகங்கள் நமது சுற்றறிக்கையைக் குறிப்பிட்டுத் தேர்தல் தொடங்கும் உத்தேச நாள்தானா? என்பதைத் தெளிவுபடுத்தும்படி கேட்கின்றன. இந்த உத்தேச தேதியானது தலைமை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் திட்டமிடலின்படி அதிகாரிகள் தங்கள் பணிகளைத் திட்டமிட்டு செய்து முடிப்பதற்கு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என ஏற்கனவே சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.”

என்று பதிவிட்டு விளக்கம் அளித்துள்ளது.