செங்கல்பட்டு:
தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக செங்கல்பட்டு எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளார்.

தமிழக உள்துறை அதிகாரி விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தமிழக தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் பேரில் எஸ்.பி. கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

அண்மையில், சென்னை வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒழுங்கு நடவடிக்கையாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

கண்ணன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய செய்திக் குறிப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.