அமராவதி:  ஆந்திராவில் ஆட்டோ மீது மின்கம்பி விழுந்து தீ பிடித்ததில், அந்த ஆட்டோவில் பயணம் செய்த  8 பேர் உடல் கருகி பலியாகினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் விவசாய பணிக்காக 8 பேர் ஒரு ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, தாடிமரி மண்டலம் கொண்டம்பள்ளி அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக செல்லும், உயர்மின் அழுத்தம் மின்கம்பி அறுந்து ஆட்டோ மீது விழுந்தது.

இதனால் ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்து மளமளவென  தீப்பிடித்தது. உள்ளே இருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததால், அவர்கள் சுதாரிப்பதற்குள், ஆட்டோ முழுவதும் தீபிடித்து கொளுந்துவிட்டு எரியத்தொடங்கியது. இதனால், உள்ளே இருந்தவர்கள் வெளியேற முடியாமல்,  தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சோக சம்பவம் குறித்து தகவல் அறிந்ததை அடுத்து, போலீசார் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது