குழந்தைகளுக்கு சனி நடக்கும்போது, பெற்றோருக்கு ஏற்படும் பாதிப்புக்களும்! – மீள்வதற்கான பரிகாரங்களும்!
ஏழரை சனி,அஷ்டம சனி குழந்தைகளுக்கு என்ன செய்யும்?
சனி கொடுத்தால் எவர் தடுப்பார்..? சனி கொடுப்பாரா ..கெடுப்பாரா..?
சனி, பலமானால் கெடுதலா நல்லதா..? இவை எல்லாருக்கும் இருக்கும் சந்தேகங்கள்.சனி லக்னத்துக்கு
sanibhagavanயோகராக இருந்தால் மட்டுமே நல்லது செய்வார்.சனி,ராகு இருவருமே வறுமையை குறிப்பவர்கள்.. அதனால் தான் இவர்கள் மறைந்தால்தான் யோகம் உண்டாகும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகிறது. சுக்கிரன் மட்டுமே ஆடம்பரமாக சுகமாக வாழ உதவுவார்.
ஏழரை சனியின்போது சனி பிறப்பு ஜாதகத்தில் சந்திரனை கடந்துசெல்வா ர்..அப்போது வாழ்க்கையில் பல மறக்க முடியாத பாடங்களை கற்றுக் கொடுத்துவிடுகிறார். சனி வறுமைதரும் கிரகம் என்பதாலும், இருள் கிர கம் என்பதாலும் மனதில் மகிழ்ச்சி தராத நிலையை ஏழரை சனியில் உண்டாக்கிவிடுகிறார்..சந்திரன் ஒளிகிரகம். சந்திரனால் உண்டாவதுதா ன் மன தெளிவு எதை எப்போது,எப்படி செய்வது எனும் தெளிவை தருவ தால்தான் நம் அன்றாட பணிகள் தினசரி நடைபெறுகிரது.சனி அவரை நெருங்கும்போது அன்றாடப்பணிகளில் மாற்றம் உண்டாகும். சனி மந்தன் அல்லவா..அதனால் அக்காலத்தில் மந்தத்தை உண்டாக்கிவிடுகிறது…
தொழிலில் இருப்பவர்களுக்கு தொழில்மீது சலிப்புஉண்டாவதும், நினை த்த காரியம் நடக்காமல் தடங்கல் உண்டாவதுமாக இருக்கும். வாயு பக வான் சனி என்பதால் வாதநோய்களையும் சிலருக்கு உண்டாக்கி விடுவா ர்.. வாகன‌ங்களில் செல்கையில் ஆபத்தும் உண்டாகும்.அதனால் பலருக் கு மருத்துவ செலவும் உண்டாகிவிடுகிறது.
ஏழரை சனி ஒருவருக்கு நடக்காமல் அவருக்கு சனி திசை மட்டும் நடந்தா லும் சிக்கல் உண்டு.19 வருடம் சனி திசை. அவர் ரிசப, மிதுன, துலாம், கன்னி லக்னத்தாராக இருந்தால் ஓரளவு நற்பலன் உண்டு.6,8ல் சனி இரு ப்பின் சனி நீசம்,பகை பெற்று இருப்பின் வாத நோய், பாரிச வாயு, எலும்பு வியாதிகள்,புற்று நோய்,ஆஸ்துமா,ஹிஸ்டீரியா போன்ற நோய் கள் தக்கக்கூடும்.8ல் சனி இருப்போருக்கு தீர்க்காயுள் உண்டு.
shaneeshwara-lord-saturn-at-thirunallarஜென்ம ராசிக்கு 12,1,2 ல் சனி சஞ்சாரம் செய்யும்போது எழரை சனி என் கிறோம் ..இப்போது துலாம்,விருச்சிகம்,தனுசு ராசியினருக்கு ஏழரை சனி நடக்கிறது.இந்த ராசியில் பிறந்த குழந்தைகளுக்கும் அஷ்டம சனி நடக் கும் மேச ராசியில் பிறந்த குழந்தைகளுக்கும்,குறிப்பாக விருச்சி கம் ராசி க்குழந்தைகளுக்கு கல்வி சற்று மந்தமாகவே இருக்கும்.கல்வி சிறப்பாக இருந்தால் உடல்நலன் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகிறது.
குழந்தைகளுக்கு சனி நடக்கும்போது தாய்க்கு உடல்நலன் பாதிப்பு, குழந் தை படும் சிரமத்தால் மனக்கவலை, தந்தைக்கு அதிக செலவுகள், குழந் தை யால் உண்டாகும் செலவாகவும் இருக்கலாம்..வருமான குறைவு இருப்பதையும் காண்கிறோம்.இக்காலகட்டத்தில் குழந்தைக ளை அதிகம் கண்டிக்காமல் இருப்பது நல்லது. இல்லை யேல் அவர்கள் மன உளைச்ச லுக்கு உள்ளாவார்கள்.சிறு குழந்தைகள் எனில் அடிக்கடி உடல் நலக் குறைவு உண்டாவதும், பத்து வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் எனில் அதிக பிடிவாதம்,கல்வியில் கவனம் செலுத்தாமை,ஹோம் ஒர்க்செய்யா மல் அலட்சியம்,பள்ளியில் குறும்பு செய்து,புகார் வருதல் என ஏழரை சனி படுத்தும்.
சனிக்கிழமை அக்குழந்தைகளை அழைத்து சென்று அருகில் இருக்கும் சிவன் கோயிலில் உள்ள நவகிரகங்களில் சனி பகவானுக்கு நல்லெண் ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்…சனிக்கிழமை காகத்துக்கு சதம் வைப்ப து, ஆஞ்சநேயரை வழிபடுவது போன்றவை சிறந்த பரிகாரங்களாகும்.