நெட்டிசன்:

முகநூல் பதிவு 

கல்வி இன்று கடைத்தெருவில்…

கல்விக்கூடங்களை சில

கயமைக் குணத்தினர்

கலவிக்கூடங்களாகியது அவலம்

 

பள்ளி  அறைகள்  சில

பண்பற்ற மாக்களால்

பள்ளியறை ஆனதொரு அவலம்

அரும்பெரும் கல்வியாளர்கள்

ஆளுமையை நீக்கி அங்கு

அரசியலார் புகுந்ததொரு அவலம் .

கள்ளுண்டு போதையோடு

பள்ளிக்குள் வந்து ஆசிரியர்

பாடம்நடத்திடும் ஓர் அவலம்

பள்ளிக் கட்டணமென்று

கொள்ளையடிக்கும் கூட்டம்

பள்ளிகள் நடத்துகின்ற அவலம் .

மதிப்பெண்ணே   குறியென்று

மாணவரை மழுங்கடிக்கும்

மதிகெட்ட கூட்டமொரு அவலம்

அத்தனையும் தெரிந்திருந்தும்

அக்கிரமம் களையாமல்

அரசாங்கம் இருக்குமொரு  அவலம்

கடைநிலையில் உள்ளவரையும்

கடைத்தேற்றும்   கல்வி இன்று

கடைத்தெருவில் நிற்பது பெரும் அவலம் .

நன்றி: சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் .