புதுக்கோட்டை:
பாஜகவுக்கு எதிராக செயல்படும் கட்சிகளை ஒடுக்கும் இயக்கமாகவே அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது என்று எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. கார்த்தி சிதம்பரம், அமலாக்கத்துறையை சிபிஐ உடன் இணைக்க வேண்டும். சிபிஐ-க்கு சில ஒழுங்கு, நடத்தை விதிமுறைகள் உண்டு, ஆனால், அமலாக்கதுறைக்கு எவ்வித விதிமுறைகளும் கிடையாது. பாஜகவுக்கு எதிராக செயல்படும் கட்சிகளை ஒடுக்கும் இயக்கமாகவே அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.