சென்னை:  தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக  15நாள் முழு ஊரடங்கு  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும், நாளையும்  சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அழகுசாதன கடைகள், சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கை தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதையொட்டி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சனி, ஞாயிறு கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டு உள்ளது.  நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊடங்கும்  ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று மற்றும் நாளை காலை 6 முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்படும் என்றும்,  பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  இன்றும், நாளையும் மாநகராட்சிகள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சலூன்கள் இயங்கலாம் என தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.