அசாம்:
சாமில் மிதமான நிலநடுக்கம் இன்று உணரப்பட்டது.

அசாம் மாநிலம், தேஜ்பூரில் இன்று பிற்பகல் 2.23 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேஜ்பூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், பூமிக்கடியில் 16 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது. எனினும் நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டாக தகவல் இல்லை.