அகர்தலா: 

திரிபுரா மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.

வடகிழக்குமாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநிலத்தில் பிற்பகல் ஒரு மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. வடக்கு திரிபுராவில் நிகழ்ந்தது.

ரிக்டர் அளவில் 4.0 அலகில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் உணரப்பட்டதும் மக்கள் வீடுகளிலிருந்து பதட்டத்துடன் வெளியே வந்தனர்.  இதனால் நிகழ்ந்த பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.